பிரான்ஸ் தாக்குதலினால் இலங்கையர்கள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் இதுவரையில் இல்லையென பாரிஸில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே இதனை தனது டவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை பிரான்ஸ் தாக்குதலில் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டார்களா? என்பதனை கண்டறிய பிரான்ஸிலுல்ல இலங்கை தூதரகம் தொடர்ந்தும் உள்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 80 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 100 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Virakesari