நேற்று மாலை 06.00 மணி முதல் இன்று காலை 06 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நீர் வெட்டு மேலும் சில மணி நேரங்களுக்கு தொடரும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று பிற்பகல் 3 மணி வரை இந்த நீர் வெட்டு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை – கல்கிசை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், வௌ்ளவத்தை, கிருளப்பனை, பாமன்கடை, ஹெல்லொக், கொள்ளுப்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அம்பதல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தெஹிவளை நீர் வழங்கும் பகுதி வரை நீர் எடுத்துச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கோளாரே இந்த நீர் வெட்டிற்க்கு காரணம் என, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.