பிலிப்பைன்ஸ் நாட்டில் சூலு கடல் பகுதியில் நிலக்கரியை ஏற்றிச்சென்ற ஒரு விசைப்படகை ஆயுதம் ஏந்திய இரு வெவ்வேறு குழுக்களை சேர்ந்த கடல் கொள்ளையர்கள் நேற்று முன்தினம் தாக்கினர்.
அந்த படகில் 13 மாலுமிகள் இருந்தனர். அவர்களை கடற்கொள்ளையர்கள் பணயக்கைதிகளாக பிடித்தனர். பின்னர் அவர்களில் 6 பேரை படகிலேயே விட்டு விட்டு, இந்தோனேசியாவை சேர்ந்த 7 மாலுமிகளை கடத்திச்சென்று விட்டனர். இதை இந்தோனேசியா வெளியுறவு மந்திரி ரெட்ரோ மார்சுடி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.