(விஷேட நிருபர்)
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் மாணவியொருவரை பாலியல் சேஷ்டை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞரின் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (10) வெள்ளிக்கிழமை குறித்த இளைஞர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (2.6.2016) மாலை காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் பிரத்தியேக வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியொருவரை பின் தொடர்ந்து அவ்வழியினால் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குறித்த மாணவியின் பின் பகுதியில் கையினால் தட்டி விட்டு சென்றுள்ளார்.
குறித்த மாணவி அவ்விடத்தில் நின்றவர்களிடம் விடயத்தை கூறியுள்ளார்.இதையடுத்து குறித்த இளைஞரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இளைஞரை கைது செய்த காத்தான்குடி பொலிசார் (3.6.2016) வெள்ளிக்கிழமையன்று குறித்த இளைஞரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இந்த இளைஞரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.